NewsSri LankaWorld

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினை நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது.

இன்றைய தினம் 06.01.2021 , Bar le Duc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை அமைச்சும் , அரச அதிபரும் வலியுறுத்த வேண்டும் என்பதனை முன்மொழிந்து முதல்வரிடம் எமது விடுதலைப்பயணத்தினை எடுத்துக்கூறி கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மேலும் Est Républicain ஊடகத்தினுடன் கலந்துரையாடலினை மேற்கொண்டு Vitry le François மாநகரசபையினை நோக்கி காவல்துறையின் பாதுகாப்புடன் விரைந்தது.
Vitry le François மாநகரசபையின் உதவிமுதல்வர், நிர்வாகிகளோடும் Union பத்திரிகை ஊடகத்துடனும் நீண்ட நேர கலந்துரையாடல் நடைபெற்று இன்றைய நாள் மேலும் வலுப்பெற்றது. இச்சந்திப்பில் Paris ல் இருந்து வருகை தந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக உதவி முதல்வர் தன்னுடைய சிறிலங்கா பயணத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவெறிச் செயல்களினை நேரிலே தாம் சந்தித்ததாகவும், அவற்றினை குரல் தழும்ப விவரித்தார். மேலும் அவர் கூறுகையில் , கால ஓட்டத்தில் எமது கடமையினை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது எம்முடைய அறவழிப்போராட்டம் தற்கால சூழலில் நீதியின் கதவுகளை ஓங்கித்தட்டும் எனவும் சோர்வின்றி ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் தெரிவித்தார்கள். அத்தோடு தாம் நிச்சயமாக தம்முடைய மாநகரம் சார்ந்து அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்க விரைந்து செயற்படுவோம் எனும் வாக்குறுதிகளும் தரப்பட்டன.

காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம், ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கமைய எம் உறவுகள் மேடு பள்ளம் மற்றும் குளிர் மலை என இயற்கையோடு போராடி தம் மெய்வருத்தி எமது நீதிக்கான வேட்கையில் வருடத்தில் இரு முறை ( மாசி , புரட்டாசி) ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அறவழிப்போராட்டங்களை மனித நேய செயற்பாட்டாளர்கள் இயக்கி வருகின்றனர். அந்தவகையில் 2021 ம் வருடத்தின் முதல் மாதத்தில் இருந்தே எதிர்வரும் மாசி மாதம் நடைபெற இருக்கும் 46 ஆவது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை இலக்கு வைத்து குறுகிய காலப்பகுதியில் பல தொடர் அறவழிப் போராட்டங்களினை நடத்தும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் பெளத்த சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசு தாம் புரிந்த இனவழிப்பு குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக பல கபட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே கால நீடிப்பின் மூலம் மேலும் இனவழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றன, இதுவரை கொடுக்கப்பட்ட கால நீடிப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தாமதமின்றி தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் சுயாதீன விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என்பதனை தம் வழித்தடம் முழுதும் அரசியல் தரப்பிடம் கோரிக்கையாக வைத்து நகர்கின்றார்கள்.

நாளை 07.01.2021 சோராத இலட்சிய வேட்கையோடு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய அறவழிப்போராட்டம் Paris நாடாளுமன்றத்தினை நோக்கி மாவீரர் சுமந்த கனவோடு விரைகின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button