News

இலங்கையின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நியமனம்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 11ஆவது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக
ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று (15) உத்தியோக பூர்வஏமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

2005 ஆம் ஆண்டு நிர்வாக சேவை பிரிவைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியான லியனகே, முன்னர் பாடசாலை பரீட்சைகள் பிரிவு மற்றும் பரீட்சை துறையின் நிர்வாகம் மற்றும் பரீட்சை திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆணையராகப் பணியாற்றினார்.

காலியிலுள்ள சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் முன்னாள் மாணவியான இவர், கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் முதல்வராகப் பணியாற்றியவர்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுகலைப் பட்டமும், களனி பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button