ஒன்பது மாவட்டங்களுக்கு மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version