தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு!

தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களின் உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத்தால் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்றைய தினம்(01) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் சி. சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதற்கமைய,
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லையில் 15.13 ஏக்கர் காணியும்,
வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராமத்தில் 20 ஏக்கர் காணியும்,
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில்,
கற்கோவளம் கிராமத்தில், 5.57 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.