
இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டதோடு 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது 43 துப்பாக்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றில் 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.