
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் (மார்ச்) 17 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைகள் நடாளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.