NewsSrilanka News

2025 பாடசாலை நாட்களில் மாற்றம்!

2025 ஆம் ஆண்டின் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை 181 நாட்களாக கல்வி அமைச்சு மட்டுப்படுத்தியுள்ளது.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை நாட்கள் 210 ஆக இருந்தது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் அது  181 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக எண்ணிக்கையான  பொது விடுமுறை நாட்கள் இருப்பதால் பாடசாலை முதலாம் தவணையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், வார இறுதி நாட்களில் 04 விடுமுறைகள் மட்டுமே உள்ளன, ஏனைய அனைத்து பொது விடுமுறைகளும் வார நாட்களில் அமைந்துள்ளன.

அதற்கமைய, 210 நாட்களுக்கு பாடசாலை செயற்பாடுகளை நடத்த முடியாது எனவும், அதன் காரணமாகவே 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்களை 181 நாட்களாக மட்டுப்படுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முதல் மூன்று வாரங்கள் இடம்பெறும்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலைகள் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button