
துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்மையுமே இந்த விபத்துக்கு காரணமென துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us



