JaffnaNews

வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு வலைகள் வழங்கினார் இந்தியத் தூதுவர்!

யாழ்ப்பாணத்திலுள்ள பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு  திட்டங்களை வடக்கில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று(17) இடம்பெற்ற மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவால் 40 மீனவக் குடும்பங்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்,இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீசாய் முரளி, இந்திய தூதரக அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதிகள்,  பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

              Advertisement            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button