
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலையடுத்து இரண்டு நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
உடன் அமுலுக்குவரும் வகையில் பாகிஸ்தான் பிரஜைகளுக்கான விசா விநியோகத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தான் பிரஜைகளும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டைவிட்டு வௌியேற வேண்டுமென இந்திய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக விசா பெற்றுக்கொண்டவர்கள் இந்தியாவைவிட்டு வௌியேற 72 மணித்தியாலங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தானிலிருந்து இயன்றளவு விரைவாக வௌியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.