JaffnaNews

யாழ்.மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக கிருபாகரன்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் நேற்று(11) பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்க அதிபர் ம.பிரதீபன் முன்னிலையில், பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதம கணக்காளராக கடமையேற்ற செ. கிருபாகரன், இதற்கு முன்னர் இலங்கை புகையிரத திணைக்களத்தில் பிரதம கணக்காளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button