NewsSports

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு!

யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு  பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று(30) இடம்பெற்றது. 

பாடசாலையின் முதல்வர் க.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி இவ்வோன் லெரிவ்வியன்,  சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், வீஜே பவுண்டேஷன் முகாமையாளருமான  க.ரஜனிகாந்தன், தென்மராட்சி வலயக்கல்வி  ஆசிரிய ஆலோசகர் சிவலிங்கம் சிவதாசன்,  தென்மராட்சி வலயக்கல்வி ‘செயற்பட்டு மகிழ்வோம்’ இணைப்பாளர்  இராசலட்சுமி மயில்வாகன சிங்கம் ஆகியோரும்,
ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர் விநாயகமூர்த்தி புனிதநிதி, நரசிங்கம் பாம் மற்றும் கட்டிடப் பொருள் உரிமையாளர் பூதத்தம்பி பாஸ்கரன், ஓய்வுநிலை ஆசிரியர் செல்வராணி சின்னத்துரை ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில், வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகிய இல்லங்களின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றது.

இடைவேளை நிகழ்வான ‘இசையும் அசைவும்’ நிகழ்வு சபையோரைக் கவர்ந்தது.

செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வில், வள்ளுவன் இல்லம் மூன்றாம் இடத்தையும், கம்பன் இல்லம் இரண்டாம், இடத்தையும் இளங்கோ இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றன.

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசல்களும்,வெற்றிக் கேடயங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button