JaffnaNews

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!

யாழ்.தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று(07) இடம்பெற்றது. 

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் கல்விச் சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றிருந்தன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகாரிகளால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பிலும், எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சீர் செய்யலாம் என்றும் நிர்வாகத்தினரால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

இது தொடர்பில், வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தோடு கலந்துரையாடல் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்வதாக ஆளுநர் இதன்போது உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button