
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தமது அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களோடு நேற்று மாலை (09) கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவையை மக்களுக்கு வினைத்திறனாக பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.