NewsSrilanka News

கொழும்பில் பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை: கல்வி அமைச்சு அறிவிப்பு!

கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை வரவழைத்து விளக்கம் கேட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்துள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் நேற்று (08) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button