நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு(01) இறையடி சேர்ந்தார்.
வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று(02)நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.
குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில் மாலை 4.00 மணியளவில் சுவாமிகளின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.
அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளுடைய இறுதி கிரியைகளில் சைவ உலக மக்களை திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.