NewsSrilanka News

தையிட்டி விகாரை தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிப்பு!

யாழ்.நோய் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரச மட்டத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்தி இன்று(11) முதல் பாரிய போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த விகாரை தொடர்பாக  புத்த சாசன அமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது, “அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது  தையிட்டி விவகாரம் தொடர்பாக அறியகிடைத்தது.

இதுவொரு பாரதூரமான விடயம் என்பதால், சகல தரப்பினரையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும் என தீர்மானித்திருந்தோம்.
எனினும், இதுவரை அரசாங்க மட்டத்தில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button