
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்” யாழ்ப்பாணத்தில் இன்று(20) திறந்து வைக்கப்பட்டது.
யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.