NewsPoliticsSrilanka News
பிள்ளையானை தொடர்புகொள்ள முயற்சித்த ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு உடன் இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக ஆரியவங்சவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரால் யாழ்.கங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனை(பிள்ளையான்) தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரியொருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது
பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக ஆரியவங்ச நீண்ட காலமாக ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.