பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டம் அல்ல!
பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்லவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸார், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத அலங்காரங்களை அகற்றி வருகின்றனர்.
தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக அவற்றை அகற்றுவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்சைஎனினும் பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கை போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – என்றார்.