NewsSrilanka News

சிசுவை விற்கமுயன்ற தாய்க்கு ஏழுவருட கடூழிய சிறைத்தண்டனை!

பிறந்து இரு நாட்களேயான சிசுவை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் சிசுவின் தாயாருக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (05) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதோடு அபராதம் செலுத்த தவறிஏன் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கநேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

பிரதிவாதியான 3 குழந்தைகளின் தாயான குறித்த பெண்ணும் மற்றும் அவரது கணவரும் நடத்தும் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்திற்குச் சென்ற ஒரு பெண்ணை பிரசவத்திற்குப் பிறகு கருக்கலைப்பு செய்யாமல் குழந்தையை விற்க வற்புறுத்தப்பட்டதுடன், குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பிரதிவாதி 2 நாள் குழந்தையை 75,000 ரூபாய்க்கு விற்றபோது
பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம், முழு மனித இனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்றும் நீதிபதி குற்றம் சாட்டினார்.

குறித்த தாயார் செய்த செயல் கடுமையானது மற்றும் வருந்தத்தக்கது என்றும் இதுபோன்ற குற்றங்களை இலகுவாகக் கருத முடியாது என்றும் இதுபோன்ற குற்றங்களுக்கு மென்மையான தண்டனைகளை வழங்குவது சாத்தியமில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button