
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று(19) பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏனைய சபைகளுக்கான வேட்புமனு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.