NewsWorld

பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சக வீரர்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார்.

அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இலங்கை நேரப்படி இன்று(19) அதிகாலை  3.27 மணியளவில் புளோரிடா அருகே கடலில் இறங்கியது. 

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக வீரர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button