
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்றும் வேட்புமனு தாக்கல் செய்தது.
சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று காலை(20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று(20) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை தவிர்ந்த யாழிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.