
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.