NewsSrilanka News
பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: க.பொ.த.சாதாரண தர பரீட்சை 17 இல் ஆரம்பம்!

2025 ஆண்டுக்கான அரச பாடசாலைகள்,அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (14) நிறைவடைகிறது.
அதேவேளை, அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.