NewsSrilanka News

பரிசுத்த பாப்பரசர் காலமானார்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று(21) காலமானார்.

12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில், நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அதன் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.

நேற்று (20) வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் பரிசுத்த பாப்பரசர் காலமான செய்தியை வத்திக்கான் அறிவித்துள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாப்பரசரின் மறைவு உலக வாழ் கத்தோலிக்க மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button