EventsNews

பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது.

கடந்த 9 வருடமாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து நடத்தி வருகின்றது.

இந்த பலூன் திருவிழா வரும் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பலூன்களில் பறந்தவாறு சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சியின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த பலூன் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிரேசில், இங்கிலாந்து, ஆஸ்திரியா, வியட்நாம், தாய்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வண்ணமயமான வெப்பக் காற்று பலூன்கள் வானை அலங்கரித்தன.

இன்று மாலை, சிறுவர், சிறுமியரை கட்டண அடிப்படையில் பறக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பலுான்கள் பறக்க விடப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 16ம் தேதி வரை பலூன் திருவிழா நடைபெறும். ஜனவரி 18, 19ம் தேதிகளில் மதுரையில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பலூன் திருவிழா நடக்க உள்ளது.

ஜனவரி 12ம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் பலூன் திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button