NewsSrilanka News

போதைப்பொருள் பயன்படுத்திய 17 பொலிஸாரின் வேலை பறிபோனது!

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தர பணிநீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவித்தபோது,”போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸாரை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம்.

அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது, ​​புலனாய்வு அமைப்புகள் மற்றும் சிறப்புப் பணியகம் மூலம் அத்தகைய நபர்களின் பட்டியலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அப்படி அடையாளம் காணப்பட்ட பட்டியலை அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஐ.ஜி.பி அனுப்பியுள்ளார்.

அதன்படி, அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள்.

அதன்படி, 17 பேர் பொலிஸ் சேவையிலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை இடைநீக்கம் செய்யவில்லை, பொலிஸ் சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம்.

மேலும், தற்போது பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன்படி, அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டால், நிறுவனக் குறியீட்டின்படி அவர்களை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவோம்”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button