
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.
பாடசாலைகளில் தற்போது பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில், நாளை 20 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.