JaffnaNews

வடக்குக் கிழக்கை சேர்ந்த இருபது பேருக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள் பொருத்தல்!

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தால் முன்னெடுக்கப்படும் மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டன. 

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 06 ஆம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டு சென்ற 20 பேருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருபது பயனாளிகளும் நேற்று இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

குறித்த செயற்றிட்டமானது யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.செல்வகுமாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு Canada Fund for Local Initiative மற்றும் Canada Sri Lanka Business Convention ஆகிய அமைப்புகள் நிதிஉதவி வழங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button