JaffnaSrilanka News
யாழில் உயிரியல் பிரிவில் இரட்டையர்களின் சாதனை!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களான இரட்டையர்கள் யமுனாநந்தா பிரணவன் மற்றும் யமுனாநந்தா சரவணன் ஆகியோர் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும், தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவின் புதல்வர்கள் ஆவர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற 55 மாணவர்கள் 3A பெற்று சித்தியடைந்துள்ளனர்.
பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு (27) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.