
யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை கைதுசெய்யப்பட்டார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனேயாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.