FoodsNewsWorld

யானைகளை கொல்ல சிம்பாவே அரசு முடிவு!

சிம்பாவேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் இருத்தல் விமர்சனங்களை ஏற்படுத்திவரும் நிலையில்,சிம்பாவே அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button