Tamilinfo

சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் மகத்தான சாதனை

ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

ஈழத்தமிழர் சார்பில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் 16 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் 10 போட்டியாளர்கள் வெற்றியீட்டினார்கள்.

அந்தவகையில் 2 தங்கப்பதக்கமும், 6 வெள்ளிப்பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக்கொண்டனர்

ஜப்பான் நாட்டில் இருந்தே முடிவுகளை அறிவித்தார்கள், இதையடுத்து வெற்றி பெற்ற ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணமே இருக்கிறது இவர்களை நாமும் பாராட்டுகின்றோம்.