Tamilinfo

பெரியகல்லாற்றில் அதிகரித்து வரும் கொரோனா – மேலும் இருவர் இணம்காணப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிக்கு சொந்தமான பெரியகல்லாறு கிராமத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரியகல்லாற்றினை சேர்ந்த குறித்த இருவரினதும் குடும்ப உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளதனை தொடர்ந்து தெற்றாளர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த குடும்பத்தினருடன் உறவினை பேணிய சுமார் 75க்கும் அதிகமான நபர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பொரியகல்லாற்றில் மொத்தமாக 07 தொற்றாளர்கள் இணம்காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து மக்கள் நடாமாற்றமின்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றது.