Tamilinfo

இலங்கையில் சற்றுமுன் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 37,261 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.