Tamilinfo

இவ் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகின…

இலங்கையில் விரைவில் நடைபெறவிருக்கின்ற அரச போட்டிப் பரீட்சைக்கான ( முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள்) வழிகாட்டி கருத்தரங்கு 01.01.2021 அன்று இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை மாவட்டத்திலுள்ள கோபாலபுரம் நிலாவெளி பகுதியில் நடைபெற்றது.

இவ் கருத்தரங்கில் பரீட்சையினை எதிர்கொள்ள இருக்கின்ற பரீட்சாத்திகள் பங்குபற்றி நன்மைகளை பெற்றுக்கொண்டதோடு இவ் கருத்தரங்கானது எமது கபிலர் மேம்பாட்டுப் பேரவையின் சிறந்த வளவாளர்களான செ.வசந்தநேசன் மற்றும் சி.வரதராசன் என்பவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.