இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க சபையில் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.

ஆனால், இந்த நாமலும் அந்த நாமலும் ஒன்றா அல்லது இந்த ராஜபக்ஷவும் அந்த ராஜபக்ஷவும் ஒன்றா என்பது தெரியவில்லை. விசாரணைகளில் உண்மை வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.
வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!