போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !

ஹட்டன் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 1400 போதை மாத்திரைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.

ஹட்டன் நகரிலுள்ள மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது மருந்தகத்திலுருந்த 1400 போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றில் இன்று(25) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

Exit mobile version