இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் பலி!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

‘ரெட்பேர்ட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘அம்புலன்ஸ் விமானம்’ நேற்றிரவு (23) 7:11 மணியளவில் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டது.

அதன்பின்னர் 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வீழ்ந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

இடியுடன் கூடிய மழை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு விமானப் பணியாளர்கள், நோயாளி ஒருவர், ஏனையவர்கள் அவரது உறவினர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

‘ரெட்பேர்ட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘அம்புலன்ஸ் விமானம்’ நேற்றிரவு (23) 7:11 மணியளவில் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டது.

அதன்பின்னர் 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வீழ்ந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

இடியுடன் கூடிய மழை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு விமானப் பணியாளர்கள், நோயாளி ஒருவர், ஏனையவர்கள் அவரது உறவினர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version