ஈரான் மீது இஸ்ரேல் இன்று(06) நடாத்திய தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய “பயங்கரவாதத் தாக்குதலில்” தனது உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான அமைதித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது!