கிளிநொச்சி – பரந்தன் உமையாள்புரம் – விளாவோடை பகுதியிலுள்ள நெல் வயலுக்கு அருகே மோட்டார் குண்டுகள் இரண்டு நேற்று(23) மீட்க்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், வெடிக்காத இரண்டு மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாகக் ஹாலோட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!