திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகள் உட்பட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதிவரை குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதிவான் எம். எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் நேற்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version