திருகோணமலை வந்த இந்திய நிவாரணப் பொருட்கள்!

பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் INS சுகன்யா எனும் போர்க்கப்பல் திருகோணமலைக்கு நேற்று(01) வருகைதந்துள்ளது.

இந்திய அரசின் உலங்கு வானூர்திகள் திருகோணமலையில் மீட்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான கப்பலும் திருகோணமலை துறைமுகத்துக்கு நேற்று வருகைதந்தது.

அதனையடுத்து அவற்றை பகிர்தளிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version