போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும் போதைப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் இதன்போது முன் வைக்கப்பட்டன.
மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான தெரு நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா, யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன,கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!