ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஈரான் அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி ‘மசூத் பெசஷ்கியான்’ நிராகரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,”இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது” என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்ததாக கூறப்படும் ஒரு கப்பல் போர் தொடங்குவதற்கு முன்பே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்திருந்ததாகவும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version