சுவிற்சர்லாந்து உறவுகளும், நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்திய கலைஞர் மதிப்பளிப்பும், திரையிசை வெளியீடும், கிளிநொச்சி – முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று(05) இடம்பெற்றது.
சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும், ‘மகரந்தம்’ திரையிசையையும் வெளியிட்டு வைத்தார்.
இதன்போது, தூவானம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் ஈழத் தமிழ் ஒன்றிய கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சி.ரகுராம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.


ஜனநாயகன் நாளை வெளியாகாது; வெளியீட்டு திகதி பின்னர் அறிவிக்கப்படும் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
அரசற்ற தேசிய இனங்களுக்கும் சிறிய நாடுகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை!
“நாங்கள் நிரபராதிகள்” நீதிமன்றில் மதுரோ தெரிவிப்பு!