இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயண்ட்ஸ் அணிக்கும் இடையில், நேற்றிரவு (23) இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின், 68ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெடுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பாரத் ரத்னா ஶ்ரீ அதல் பிஹாரி வாஜ்பாய் ஏஹானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜாயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு ஸ்ரேயாஸ் ஐயர் செய்யப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version