இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்
தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர்.
அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம்பெற்றது.
அதற்கமைய, பப்புவா நியூ கினியாவின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
சோமாலிய கூட்டாட்சி குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவாவும்,
லக்சம்பர்க் குடியரசின் தூதுவராக கிறிஸ்டியன் பீவெர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வத்திக்கான் நகரின் தூதுவராக மொன்சிக்னோர் ஆண்டரேஜ் ஜோஸ்வோவிட்டும்,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் நய்யர் நசீரும்,
குவைத் நாட்டின் தூதுவராக சாலேஹ் முபாரக் அல் -சார்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!